Skip to main content

Saree Love (part 3)

 பிறந்தநாள் இன்று காலை கலா வந்து மதனை அதி காலையிலேயே எழுப்பினாள். விடியற்காலையில் எழுவது அவனுக்கு புடிக்காட்டியும் தன் அம்மாவிற்காக எழுந்து போய் குளிக்க சென்றான் குறிக்கும்போது தான் பொதுவாக உபயோகப்படுத்தும் சோப்பு ஷாம்பு எல்லாம் மாறி இருப்பதை கவனித்தவன்




புது பொருட்களை வைத்து குளித்து முடித்துவிட்டு தன் அறைக்கு வந்தான் அப்பொழுது அவனுக்கு ஒரு அதிர்ச்சி அங்கே மூன்று பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் அதை பார்த்து அம்மாவிடம் என்னம்மா இது யாரோ மூணு பொண்ணுங்க ரூமுக்குள்ள நிக்கிறாங்க அப்படின்னு கேட்க அவங்க எல்லாம் சிறந்த மணப்பெண் அலங்காரம் செய்பவர்கள் டா உனக்காக நான் தான் வர வச்சேன் அப்படின்னு சொல்ல அம்மா எனக்கு மத்த பொண்ணுங்க முன்னாடி நான் எப்படி புடவை கட்டிக்கிறது எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு அப்படின்னு சொன்னேன். டேய் அவங்க எல்லாம் தொழில் வல்லுனர்கள் தான் உன்ன மாதிரி நிறைய பசங்களுக்கும் இந்த மாதிரி மணப்பெண் அலங்காரம் பண்ணி இருக்காங்க அதனால நீ சங்கட்டப்படவே தேவையில்லை அங்க யாரும் உன்னை கிண்டல் பண்ணவும் போறது இல்ல சொன்னா கேளு போ அப்படின்னு சொல்ல கொஞ்சம் தைரியத்துடன் ரூமிற்கு சென்றான். உள்ளே சென்றவுடன் அந்த பெண்களும் தன் வேலையை தொடங்கினர் மதனும் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டான் முதலில் அவனுக்கு சிலிக்கான் மார்பகத்தை பொருத்தி பிரா அணிந்தவுடன் மதன் ரொம்பவே வெட்கப்பட்டான் பின்பு அவனை பேண்டி மாற்றி வர சொல்லிவிட்டு பின்பு அவனுக்கு பாவாடையை கட்டி விட்டு அவன் போலி மார்பகத்திற்கு அழகாக பொருந்தியபடி தைக்கப்பட்டு இருந்த பிளவுசை முதுகு பக்கம் பின் மாட்டிவிட்டனர். தன் ஈரத் தலையில் கட்டப்பட்டிருந்த துண்டும் மார்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த பிளவுஸும் இடுப்பில் கட்டி இருந்த பாவாடையோடு தன்னை கண்ணாடியில் பார்க்க மதனுக்கு தனக்குள் இருந்த ஆண் என்ற எண்ணம் சிறிது சிறிதாக அழிய தொடங்கியது. பின்பு அவனுக்கு அழகாக மடிப்பு எடுத்து கச்சிதமாக புடவையை கட்டி விட்டனர் பின்பு மேஜையில் அவனை உட்கார வைத்து இடுப்பு வரை வளர்ந்து இருந்த அவன் தலைமுடியை பார்த்து அந்த பெண்களை ஆச்சரியப்பட்டனர் பின்பு அழகாக அவன் தலையை வாரி ஒற்றை ஜடை பின்னி விட்டனர். அப்பொழுது ஒரு பெண் மதனின் தலைக்கு மல்லிகை மற்றும் கனகாம்பரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் தலை அலங்கார ஆபரணத்தை தன் தலையில் பொருத்த வரும்போது மதனுக்கு தன்னை அறியாமல் ஒரு பக்கம் வெக்கம் பிடுங்கி தின்றது தன் கனவில் கூட தன் தலைமுடியை ஜடை பின்னி தலை நிறைய பூக்களால் அலங்கரித்துக் கொள்வேன் என்று நினைத்ததில்லை என்று மனதிற்குள் நினைத்து வெட்கப்பட்டு சிரித்துக் கொண்டிருந்தான்.


 பின்பு கையில் வளையல் காலில் கொலுசு காதில் தோடு கழுத்தில் நெக்லஸ் தலைமுடியை இரண்டாகப் பிரித்த நடுவகுடின் மேல் நெத்திசூடி என்று அலங்கரித்துவிட்டு வெளியே சென்றார்.



வெளியே சென்றவுடன் கலாவை பார்த்து இப்ப போய் பாருங்க உங்க பொண்ண எவ்வளவு அழகா பெண்மையா மகாலட்சுமி போல இருக்கா தயவுசெய்து இப்படியே வெளியே ஏதும் கூட்டிட்டு போயிடாதீங்க ஆம்பளைங்க பார்த்தாங்கன்னா எனக்கு வேணும் இல்லை எனக்கு தான் வேணும்ன்னு உங்க பொண்ண பொண்டாட்டியா அடையறதுக்கு மாறி மாறி பொண்ணு கேட்டு வர போறாங்க அப்படின்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே பேச கலாவும் அவங்க பேசுவதெல்லாம் ரசித்து கேட்டுட்டு அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு அனுப்பி விட்டார்.


தொடரும்.........

Comments