Skip to main content

குலதெய்வ வேண்டுதல் (part 7)

 அன்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க வீட்டுக்கு போனேன் போகும்போது அனிதா சொன்னா டேய் மணி எட்டு தான் ஆகுது பூ வச்சு ரெண்டு மணி நேரம் கூட ஆகல அதனால வீட்டுக்கு போன உடனே பூவ ஏதும் எடுத்து போட்றாதடா காசு போட்டு வாங்குனதுக்காவது கொஞ்ச நேரம் வச்சுக்கோ அப்படின்னு சொன்னா நான் அய்யையோ அதெல்லாம் முடியவே முடியாது நான் எப்படா அதை எடுக்கிறதுன்னு தான் இருக்கேன் வீட்டுக்கு போன உடனே இந்த பூவை தூக்கி குப்பை தொட்டியில் போட்டு விடுவேன் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். வீட்டுக்கு போனதும் சரி தூங்கலாம் அப்படின்னு ரூமுக்கு படுக்க போனேன் அப்பொழுது தான் தலையில் பூ வைத்திருக்கிறேன் ஞாபகம் வந்துச்சு சரி அதை எடுக்கலாம் அப்படின்னு போறதுக்கு முன்னாடி இன்னைக்கு சாயங்காலத்தில் இருந்து பூ வச்சிருக்கோமே இதுல பாக்குறதுக்கு நாம எப்படி தான் இருக்கோம்ன்னு கண்ணாடியில் பார்ப்போம் அப்படின்னு சொல்லிட்டு போய் கண்ணாடில பார்த்தேன் கண்ணாடியில் பார்க்க என்னுடைய வட்டமான முகம் நீளமான ஜடை அதுல அழகா இரண்டு முழம் மல்லிகை பூவ வச்சிருந்த என்ன பாக்க எனக்கே ரொம்ப ஆச்சரியமாகும் ரொம்ப அழகாவும் ரொம்ப பெண்மயாவும் தெரிஞ்சேன். அப்பொழுதுதான் அனிதா அவங்க வீட்டுல கண்ணாடி பாக்கும்போது என்ன பற்றி எனக்கு சொன்னது ஞாபகம் வந்துச்சு உடனே என்னுடைய ஜடையை தூக்கி முன்னாடி போட்டு பூவையும் எடுத்து என் தோள்ல போட்டு என்ன அறியாமையே என் பெண்மையை ரசிச்சுக்கிட்டு இருந்தேன். அப்பொழுது என் நெற்றியில் பொட்டு இருக்கிற மாதிரி தெரிஞ்சது ஆனா என் நித்திய தொட்டு பார்த்தா பொட்டு இல்லை அப்புறம் தான் புரிஞ்சது பொட்டு கண்ணாடியில் ஒட்டி இருக்கு நான் அந்த இடத்தில போய் நிற்கவும் என் நெத்தியில வச்ச மாதிரி அது காட்சி படுத்தி இருக்கு சரி இவ்வளவும் பண்ணிட்டோம் அந்த பொட்ட தான் எடுத்து வச்சு பார்த்துவிடுவோமே எப்படித்தான் இருக்குன்னு என் மனசுக்குள்ள தோணுச்சு இருந்தாலும் டேய் அக்ஷய் நீ ஒரு பையன் டா நீ ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிற அப்படின்னு ஒரு பக்க மனசு சொல்லுச்சு, இன்னொரு பக்க மனசு எந்தப் பையனுக்கும் கிடைக்காத வாய்ப்புடா இது அந்த பொட்டை எடுத்து நெத்தில வச்சு பாரு எப்படித்தான் இருக்குன்னு இன்னொரு பக்கம் சொல்லுச்சு சரி இதை விட்டா இன்னொரு நாள் கிடைக்காதுன்னு பொட்ட எடுத்து என்னோட நெத்தியில வச்சு என்ன அழகு பார்த்தேன் அப்படி ஒரு பெண்மையான முகம் எனக்கு கண்ணாடியை விட்டு போக மனசு இல்ல கண்ணாடி முன்னாடியே நின்னுகிட்டு இருந்தேன் மணி இரவு 10.30 ஆயிடுச்சு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது உடனே பொட்டை எடுத்து திரும்ப கண்ணாடியிலேயே ஒட்டிட்டு அவசர அவசரமா கீழ ஓடி வந்து கதவை திறந்து பார்த்தா அம்மா உள்ள வாங்கமா அப்படின்னு கூப்பிட்டு ஏன்மா இரவு இவ்வளவு நேரம் கழிச்சு வர்றதுக்கு நாளைக்கு விடியற்காலையிலே வரலாம்ல அப்படின்னு கேட்டேன், அது ஒன்னும் இல்லடா நீ தனியா இருப்பேன்றனால தான் வந்தேன் நாளைக்கு திங்கட்கிழமை உன்ன ஸ்கூலுக்கு வேற கிளப்பி விடணும் உன் அப்பாவும் எப்போ வெளியூரில் இருந்து வருவார்ன்னு தெரியல. அதுதான் வந்துட்டேன் அப்படின்னு சொல்லிட்டு சும்மா சொல்ல கூடாதுடா தேவி என்கிட்ட சொல்லும் போது கூட நான் நம்பல உன் கூந்தல் அடர்த்திக்கும் உன் ஜடை இருக்கிற நீளத்துக்கும் மல்லிகை பூ வச்சா ரொம்ப அழகா தான் இருக்கு அப்படின்னு சொன்னாங்க , நான் ஆச்சரியப்பட்டு அம்மாவை திரும்பி பார்த்தேன் 



அப்போ தான் நான் பூ வெச்சி இருந்ததே எனக்கு ஞாபகம் வந்தது வெக்கத்துல தலை குனிந்து நின்னேன் . ஒன்னும் வெட்கப்படாதேடா போய் வெளிகதவ சாத்திட்டு வா அப்படின்னு சொன்னாங்க நானும் வெளியே கதவ சாத்த போனேன் நான் கேட்ட சாத்தும் பொழுது எதிர் வீட்டில் இருந்து அனிதா பார்த்தா.

அனிதா : இவன் என்ன ஏதோ போன உடனே பூவ தூக்கி போட்டுருவேன் அப்படின்னு சொன்னா மணி 10.30 க்கு மேல ஆகுது இன்னும் வச்சுட்டு இருக்கா மறந்துட்டானா இல்ல அவனுக்கே பூ வச்சிருக்க புடிச்சி இருக்கான்னு தெரியலையே சரி விடு காலைல ஸ்கூலுக்கு போகும்போது கேட்டுப்போம் அப்படின்னு போய் படுத்துட்டா

 அக்ஷய் உள்ள வந்து அம்மா நீங்க என்னை ஒரு மாதிரியா பாக்குறீங்க நீங்க மனசுல ஏதும் தப்பா நினைக்காதீங்க எல்லாம் தேவி ஆண்டியும் அனிதாவும் பண்ண வேலை எனக்கே இத எப்படா எடுக்கிறதுன்னு இருக்கு தலை ரொம்ப பாரமா தெரியுதும்மா நான் பேசாம முதல்ல பூவை எடுக்கிறேன் அப்படின்னு சொன்ன உடனே, அம்மா ;டேய் நில்லுடா அதெல்லாம் ஒன்னும் வேணாம் தலையில் வைத்த பூவை எடுக்கிறது வீட்டுக்கு நல்லது இல்ல ஏற்கனவே சாமிக்கு வேண்டுமென முடி வேற அதுல பூ வெச்சா சாமிக்கே வச்ச மாதிரி அதனால இப்ப ஒன்னும் எடுக்க வேணாம் நைட் அப்படியே தூங்கு காலையில பாத்துகளாம் அப்படின்னு சொன்னாங்க சரி மா உனக்காக இத நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு மாடிக்கு போய் தூங்க போறேன்



ஆனா என் மனசுக்குள்ள பூவ தூக்கி போடணும் அப்படிங்கிற எண்ணமே இல்லை இன்னொரு தடவை பூ வச்சுக்க வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா அத பயன்படுத்திக்கணும் விட்டுட கூடாது அப்படின்னு தோணுச்சு அப்படியே போய் தூங்கிட்டேன்




தொடரும்.......

Comments

Iron man said…
🥰🥰🥰🥰🥰🥰
Waiting for next
Anonymous said…
Eagerly waiting for the next part ✨
Anonymous said…
Twitter I'd share panuvingala please
Anonymous said…
Next part please
Anonymous said…
Lovely subject 😃😍😍❣️
Anonymous said…
Perfect di

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

Arjun's life Part - 1

The Seeds of Change In the quiet lanes of a small Tamil village, nestled between the gentle curve of a river and rows of lush, green paddy fields, lived a boy named Arjun. At 13, he was of average height, with a face that still held the softness of childhood. His eyes sparkled with a curiosity that was sometimes mistaken for mischief, and his hair—still short and unruly—was a source of teasing from his mother, Vani, and his older sister, Priya. "Arjun, why don’t you let your hair grow long like the other boys in the village?" Vani had asked one evening, her voice gentle as she ran her fingers through her son's short curls. "I don't know, amma," Arjun replied, looking into the mirror with a frown. He had always felt indifferent about his hair, seeing it as something he simply had to maintain. But something about the way his mother spoke—so tenderly, as if it were the most natural thing—made him think differently. "Long hair is beautiful," Priya said...