Skip to main content

குலதெய்வ வேண்டுதல் ( part 1 )

என் பெயர் அக்ஷய் , எங்க அம்மா பெயர் நர்மதா எங்க அப்பா பேரு சங்கர் நாங்க நாகர்கோவில்ல அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறோம். இது கிராமம் என்பதால் மிக குறைந்த வீடுகள் மட்டுமே இங்கு உள்ளன. எங்கள் வீட்டின் அருகில் ஒரு குடும்பம் உள்ளது தேவியேனும் ஒருவரும் அவர்களுக்கு அனிதா மற்றும் சஞ்சய் எனும் இரு பிள்ளைகளோடு வாழ்ந்து வந்தார். தேவிக்கு கணவர் இல்லை. இதில் எனக்கும் அனிதாவிற்கும் ஒரே வயது சஞ்சய் எங்களை விட மூன்று வயது சிறியவன் அவர்கள் எங்களுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் என்பதால் எங்கள் குடும்பமும் அவங்க குடும்பமும் உறவினர்கள் போல நெருங்கி பழகி வந்தோம். 


நானும் அனிதாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். எங்கள் ஊரின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் நாங்கள் படித்து வந்தோம் அப்பொழுது நானும் அனிதாவும் எட்டாவது படித்துக் கொண்டிருந்தோம் சஞ்சய் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். அன்று ஒரு நாள் நானும் அனிதாவும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது அவ வயிறு ரொம்ப வலிக்குதுன்னு சொன்னா சரின்னு சஞ்சய் மட்டும் ஸ்கூலுக்கு போக சொல்லிட்டு நான் அனிதாவை கூப்பிட்டு வீட்டுக்கு வந்துட்டேன் அன்னைக்கு நானும் ஸ்கூலுக்கு போகல ரூமுக்கு போய் அப்படியே தூங்கிட்டேன் நைட் அம்மா சாப்பிட வந்து எழுப்பினார்கள் அப்பொழுது கேட்டேன் அனிதா என்னம்மா ஆச்சு உடம்பு பரவாயில்லையான்னு, பரவாயில்லைடா அவ பெரிய மனுஷி ஆகிவட்டா அப்படின்னு சொன்னாங்க. அப்படின்னா என்னம்மா? அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாதுடா அப்படின்னு சொல்லிட்டாங்க. அப்புறம் ஒரு மாதம் கழித்து தான் அவ ஸ்கூலுக்கு வந்தா அப்பா அவ கிட்ட கேட்டேன் ஏன்டி வயசுக்கு வரது என்றால் என்ன அப்படின்னு அவளும் சீ போடா இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் உனக்கு எதுக்கு அப்படின்னு சொல்லிட்டு விட்டுட்டா. அப்படியே கொஞ்ச நாள் போக  ஒரு நாள் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரப்போ சைக்கிள்ல இருந்து கீழே விழுந்துட்டேன் பெருசா ஒன்னும் அடி படல இருந்தாலும் வீட்டுக்கு வந்த உடனே காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி சாதாரண காய்ச்சல் தான் கொஞ்ச நாள்ல போய்விடும் அப்படின்னு பார்த்தா 15 நாட்களுக்கு மேல் இருந்தும் காய்ச்சல் போகல எவ்வளவோ மெடிக்கல் டெஸ்ட் எடுத்தோம் என்னன்னு தெரியல. அப்போதான் அப்பா சொன்னாரு பேசாம நம்ம குலதெய்வம் கோவிலுக்கு ஒரு தடவை போயிட்டு வந்துருவோம் ஏழு வருஷம் ஆச்சு குலதெய்வத்தை பார்த்து அதனாலதான் இப்படி எல்லாம் நடக்குதோ என்னவோ எதுக்கும் போயிட்டு வந்துடுவேன்னு சொல்லி எங்க குடும்பமும் தேவி அம்மா குடும்பமும்  கிளம்பினோம். சாமி எல்லாம் கும்பிட்டுட்டு கிளம்பும்போது பூசாரி ஒரு நிமிஷம் நில்லுங்க அப்படின்னு சொன்னாரு நாங்க என்னன்னு கேட்டப்போ நீங்க எதுக்காக இங்க வந்தீங்க என்றது எனக்கு தெரியும் உங்க பையனுக்கு உடம்பு சரியில்லாம போனது உங்க குலதெய்வத்தோட கோபத்தால் தான். உங்க பையனுக்கு உடம்பு குணமாக வேணும்னா கடந்த ஏழு வருஷமா உங்க குல தெய்வத்தை நீங்க கவனிக்காம விட்டதுக்கு அடுத்த ஏழு வருஷம் உங்க பையன் முடி வளர்த்து இந்த கோவிலுக்கு காணிக்கை செலுத்த வேண்டும் அப்படி செஞ்சீங்கன்னா உங்க குடும்பத்திற்கு அதுக்கப்புறம் எந்த பாதகமும் வராமல் இந்த தெய்வம் உங்களைப் பாதுகாக்கும் அப்படின்னு சொன்னாரு எங்க அம்மாவும் அப்பாவும் சரின்னு ஒத்துக்கிட்டாங்க இப்ப நான் எட்டாவது தான் படிக்கிற சின்ன பையன் அப்படிங்கறதால முடி வளர்க்கறது என்ன பெரிய விஷயமா அப்படின்னு நினைச்சு விட்டுட்டேன்.


தொடரும்......

Comments

Anonymous said…
😍😍
Iron man said…
Good start
Waiting for next
Priyadharshini said…
Superb start please continue
Vasantha said…
Super 👌 pa pls continues pa
Anonymous said…
Can write Tamil in English please?
Anjali said…
Please write the stories in English.
Iron man said…
Hello madam
Next part eppo ??
Anonymous said…
Next part
Anonymous said…
Eppo di next part
Ammu said…
Super start di

Popular posts from this blog

Ramesh to Ramya ( END )

 பிறகு அடுத்த நாள் காலை இருவரும் சகஜம் போல் பேசிக் கொண்டுஇருந்தோம் அப்போ நான் சொன்னேன் இனிமே நமக்குள்ள எந்த சண்டையும் நடக்காது உனக்கு புடிச்ச படி நான் கடைசி வரைக்கும் இருப்பேன் அப்படின்னு உடனே பிரியா சொன்னா சரிடா ஆனா ஒரு கண்டிஷன். என்னடி ? நம்ம நிச்சயதார்த்தத்திற்கும் கல்யாணத்திற்கும் ஏன் முதலிரவுக்கும் கூட நம்ம ரெண்டு பேரும் புடவையில் தான் இருக்கணும், முக்கியமா நம்ம கல்யாணத்த அன்றைக்கு நம்ம ரெண்டு பேரும் மணப்பெண் அலங்காரத்தில் தான் இருக்கணும் அப்படின்னு சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஆயிரம் சொந்தக்காரங்க வருவாங்க அவங்க எல்லாம் என்ன பாத்து என்ன நினைக்க போறாங்க என்ற கவலை இருந்தாலும் ஏற்கனவே கிராமத்தில் இருக்கவங்களும் என் கூட படிச்சவங்க என் சொந்தக்காரங்க எல்லாம் என்ன பொண்ணா வாழ ஆசைப்படுகிறேன் என்று தான் நினைச்சுட்டு இருக்காங்க பிரியா சைடு சொந்தக்காரங்க யாருமே இல்ல என்னுடைய எதிர்காலமே பிரியாதா அப்படின்னு முடிவு பண்ணதுக்கு அப்புறம் அவளுக்காக என்ன செஞ்சா என்ன அப்படின்னு தோணுச்சு உடனே நான் ஒத்துக்கிட்டேன் . இதைக் கேட்ட அம்மா அண்ணி அப்பா அண்ணன் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம். பிறகு நிச்சயதார்த்த...

Saree Love (Final part)

 ‌அவர்கள் ரூமை விட்டு வெளியே சென்றவுடன் மதன் தன்னை கண்ணாடியில் கவனிக்கத் தொடங்கினான். இடுப்பு வரை நீளமாக பின்னப்பட்டிருந்த தன் கூந்தல் தன்னை நீ ஒரு பெண் என்று வாசனையால் உணர்த்தும் மல்லிகை பூ தன் கூந்தல் முழுக்க அலங்கரிக்கப்பட்டதையும் கவனித்தான். தன் தலையை அசைக்கும் போத்தெல்லம் அங்கும் இங்குமாய் அழகாக ஆடும் தனது ஜிமிக்கி புடவை முந்தானையையும் புடவை மடிப்பையும் சரி பார்க்கும் போது சத்தமிடும் வளையல்கள் ஒரு அடி முன்ன பின்ன நடந்தாலே ஜல் ஜல் என்று ஊரையே கூட்டும் கொலுசின் ஓசை. அனைத்தையும் தன்னை அறியாமலே அனுபவித்துக் கொண்டிருக்கும் போது கலா உள்ளே வந்தால் தன் மகனின் இந்த மணப்பெண் தோற்றத்தை பார்த்து அதிர்ச்சியில் கண்களில் ஆனந்த கண்ணீருடன் அவனை கட்டி அணைத்தால். என்னுடைய பொண்ணு இன்னைக்கு மணப்பெண் ஆகிட்டா அப்படின்னு சொல்லி சிரிக்க மதனுக்கும் வெட்கம். அப்படியே மாப்பிள்ளை பார்க்க பெண் வீட்டார்கள் வந்தால் மணப்பெண்ணை தோளில் கை வைத்தபடியே மணப்பெண் தோழிகள் அறையை விட்டு வெளியே கூட்டி வருவது போல் தன் மகனை மணப்பெண் அலங்காரத்தில் அறையை விட்டு வெளியே வெட்கத்துடன் கூட்டிக்கொண்டு வந்தால் பின்பு அவனை மேஜையில...

Arjun's life Part - 1

The Seeds of Change In the quiet lanes of a small Tamil village, nestled between the gentle curve of a river and rows of lush, green paddy fields, lived a boy named Arjun. At 13, he was of average height, with a face that still held the softness of childhood. His eyes sparkled with a curiosity that was sometimes mistaken for mischief, and his hair—still short and unruly—was a source of teasing from his mother, Vani, and his older sister, Priya. "Arjun, why don’t you let your hair grow long like the other boys in the village?" Vani had asked one evening, her voice gentle as she ran her fingers through her son's short curls. "I don't know, amma," Arjun replied, looking into the mirror with a frown. He had always felt indifferent about his hair, seeing it as something he simply had to maintain. But something about the way his mother spoke—so tenderly, as if it were the most natural thing—made him think differently. "Long hair is beautiful," Priya said...